இதென்ன மோசமான ஆட்டம் : பேட்ஸ்மேன்கள் மீது கே.எல்.ராகுல் பாய்ச்சல்
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், 31 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது.
இந்த தோல்வியால் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் லோகேஷ் ராகுல், பேட்ஸ்மேன்கள் மீது அதிருப்தி அடைந்துள்ளார். இது தொடர்பாக, அவர் கூறியதாவது :
எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. தவானும், விராட் கோலியும் நன்றாக பேட்டிங் செய்தனர்.
20 முதல் 25 ஓவர்கள் வரை இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தோம்.
மோசமான ஆட்டம் :
மிடில் ஓவர்களில், நாங்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து விட்டோம்.
மிடில் ஆர்டர் பேட்ஸ் மேன்களின் மோசமான ஆட்டத்தால் தோல்வி ஏற்பட்டது. மிடில் ஓவர்களில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் சிறப்பாக பந்துவீசி முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
மிடில் ஓவரில், ஒரு ஜோடியாவது நிலைத்து ஆடியிருக்க வேண்டும். நாங்கள் எக்ஸ்ட்ரா மூலம் கிட்டத்தட்ட 20 ரன்கள் வரை கொடுத்துவிட்டோம். இது அதிகமானதே.
நாங்கள் சில தவறுகள் செய்துவிட்டோம். வீரர்கள் அதிலிருந்து பாடம் கற்று இருப்பார்கள்' என்றார்.
நாளைய ஆட்டம் :
இந்த வெற்றி மூலம், 3 போட்டிகொண்ட ஒரு நாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
2-வது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் நாளை நடக்கிறது.
*