ஜூன் 23-ந்தேதி, உலக ஒலிம்பிக் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?
 

By 
Why is World Olympic Day celebrated on June 23

1948-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டபோது, ஒலிம்பிக் தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகில் உள்ள தகுதியான அனைவரும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை முன்னெடுத்துச் செல்லும் விதமாக இந்தத் தினம் அறிமுகம் செய்யப்பட்டது.

205 நாடுகள் :

ஒலிம்பிக் தினம் அன்று, ஒலிம்பிக் ஓட்டம் கடந்த 20 ஆண்டாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

அப்போது, தேசிய ஒலிம்பிக் கமிட்டியில் இருந்து 45 நாடுகள் 1987-ல் பங்கேற்றன. தற்போது 205 நாடுகளில் ஒலிம்பிக் ஓட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

தற்போது ஒலிம்பிக் தினம் அன்று விளையாட்டு, கலாச்சாரம், கல்வி போன்றவற்றை கற்றுக் கொடுக்க ஒலிம்பிக் கமிட்டி ஏற்பாடு செய்துள்ளது.

ஒலிம்பிக் தீபம் :

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நாளில் நடத்தப்படும் கோலாகலமான விழா, 1908-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. 

ஒலிம்பிக் தீபம், முதன் முதலில் 1928-ம் ஆண்டு ஆம்ஸெடர்டம் என்பவரால் ஏற்றப்பட்டது. இந்த ஒலிம்பிக் தீபமானது, ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஏற்றப்படும். 

பின்னர், பல நாடுகளில் பல வீரர்களால் ஏந்திச் செல்லப்பட்டு, ஒலிம்பிக் போட்டி தொடங்கும் நாளன்று, ஒலிம்பிக் போட்டி நடைபெறும் மைய அரங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

ஆறு வண்ணங்கள் :

ஒலிம்பிக் கொடியில் மொத்தம் ஆறு வண்ணங்கள் இருக்கும். வெள்ளை நிறத்தைப் பின்புலமாகக் கொண்ட கொடியின் மீது ஊதா, மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு ஆகிய ஐந்து நிறங்களில் வளையங்கள் வரையப்பட்டிருக்கும் இந்த வளையங்கள், ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களைக் குறிக்கின்றன. இந்தக் கொடி 1920-ம் ஆண்டு தான் முதல் முதலாக பறக்கவிடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும், நவீன ஒலிம்பிக் போட்டி உருவாக்கப்பட்ட நாளான ஜூன் 23-ந் தேதியை, ‘உலக ஒலிம்பிக் தினம்’ என்று அனைவரும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

Share this story