உலக டேபிள் டென்னிஸ் களம் : 3-வது சுற்றுக்கு இந்திய வீரர் சத்யன் முன்னேறினார்..
Nov 26, 2021, 16:17 IST
By
* உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் சத்யன் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஜி.சத்யன் மற்றும் ரஷியாவின் விளாடிமிர் சிடோரென்கோ மோதினர்.
இந்த ஆட்டத்தில் ஜி. சத்யன் 11-9, 11-9, 11-8, 11-6 என்ற செட் கணக்கில் விளாடிமிர் சிடோரென்கோவை தோற்கடித்து, 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
* இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.