தமிழகத்தில் 30,000 சிறப்பு முகாம்கள் : வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை வேண்டுகோள்
தமிழகத்தில், கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
நாளை 5-வது முறை :
கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த சிறப்பு முகாம்கள் மூலம் இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்படுவதால், இதனைத் தொடர்ந்து நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
4 வாரமாக நடைபெற்ற முகாம்கள் மூலம் சுமார் 80 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
நாளை 5-வது முறையாக, தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
வேண்டுகோள் :
இந்த முகாம்களில், இதுவரையில் தடுப்பூசி போடாத தகுதியுள்ள பொதுமக்கள் பங்குபெற, அனைத்து மாவட்டங்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.