இன்று ஒரே நாளில் 329 இந்தியர்கள் மீட்பு.. தலிபான்களுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை

By 
329 Indians rescued in a single day today .. Joe Biden warns Taliban

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் வந்துள்ளது. தலிபான்கள் கடுமையான சட்ட திட்டங்களை அமல்படுத்தக்கூடும் என்பதால், அங்கிருந்து ஏராளமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் :

இந்நிலையில், இன்று ஒரே நாளில் 329 இந்தியர்கள் மூன்று விமானங்களில் மீட்கப்பட்டுள்ளனர். 

ஏர் இந்தியா விமானத்தில் 87 இந்தியர்கள், நேபாளத்தை சேர்ந்த 2 பேர் ஆக மொத்தம் 89 பேர் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர். 

அந்த விமானம் தஜிகிஸ்தான் வழியாக பயணித்து, டெல்லிக்கு இன்று அதிகாலை வந்தடைந்தது.

தக்க பதிலடி :

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது :

தலிபான்களால் பாதிக்கப்படக் கூடியவர்களை, ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தங்கள் நாட்டு வீரா்களை, அந்த அமைப்பினா் தாக்கினால், அதற்கு பலத்த பதிலடி கொடுக்கப்படும்.

அவா்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினாலோ, அமெரிக்க வீரா்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தாலோ அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்' என்றார். 
*

Share this story