தனது பேத்தியை கடத்திய 70 வயது பாட்டி ; ஏனென்றால்..

By 
70-year-old grandmother who abducted her granddaughter; Because ..

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியை அடுத்துள்ள திருச்சானூரை சேர்ந்த வகுளம்மாவின் மகள் வழி பேத்தி ராசாத்தி (14). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 

சிறுமிக்கு திருமணம் :

14 வயது மைனர் பெண்ணான இவரை, வகுளம்மாவின் மகன் வழி பேரனான 29 வயதான முரளி கிருஷ்ணாவிற்கு திருமணம் செய்வதற்காக, சிறுமி என்றும் பாராமல் தன்னுடைய சொந்த பேத்தியை கடந்த 6 ந்தேதி ரகசியமாக கடத்திச் சென்றுவிட்டார் அவரது பாட்டி.

அப்போது முதல் அவருடைய மகன் ஆதிநாராயணன், மருமகள் லிங்கம்மா, பேரன் முரளி கிருஷ்ணா ஆகியோரையும் காணவில்லை. 

இதுதொடர்பாக கடத்தப்பட்ட சிறுமியின் தாய் லட்சுமி  அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்துள்ள திருச்சானூர் போலீசார் வகுளம்மா, கடத்தப்பட்ட சிறுமி , ஆதிநாராயணன், லிங்கம்மா, முரளி கிருஷ்ணன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

எதிர்காலம்? :

இது குறித்து, சிறுமியின் தாயார் லட்சுமி கூறியதாவது :

நான் ஒரு விதவை, என் மகள் மற்றும் 8 வயது மகனுக்கு நல்ல கல்வியை வழங்குவதற்காக, என் கணவரை இழந்ததிலிருந்து நான்  வீட்டு வேலை செய்து வருகிறேன். 

ஆனால், இன்று என் குழந்தைகளுக்கு பிரகாசமான எதிர்காலம் குறித்த எனது நம்பிக்கைகள் அனைத்தும் என் மகளின் கடத்தலால் அழிந்துவிட்டன.

இப்போது, நான்கு நாட்கள் கடந்துவிட்டன. என் மகள் இருக்கும் இடம் குறித்து எந்த தகவலும் இல்லை. திருச்சனூர் போலீசாரிடம் நான் வைத்த ஒரு வேண்டுகோள் என்னவென்றால், என் மகளை மீட்டு, விரைவில் என்னுடன் மீண்டும் சேர்க்க  வேண்டும் என்பதுதான்' என்றார்.

Share this story