15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : ஆய்வு மையம் தகவல்

By 
rain2

தமிழகத்தின் சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்றும், நளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், 

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய 15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் 16 செ.மீ., மழையும், பேராவூரணி, காட்டுமன்னார் கோவிலில் தலா 6 செ.மீ., மதுக்கூரில் 5 செ.மீ., பட்டுக்கோட்டையில் 4 செ.மீ.மழையும் பதிவாகியுள்ளது.

Share this story