திமுக ஆட்சி ஓராண்டு நிறைவு : ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து-முதல்வர் ஸ்டாலின் நன்றி

By 
dmk one

ஓராண்டு நிறைவையொட்டி, முதலமைச்சர், அமைச்சர்களுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துகளை தெரிவித்தார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

ஓராண்டு நிறைவையொட்டி, அமைச்சர்களுக்கும் அவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.

முதன்மை மாநிலம் :

இதுகுறித்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது :

உங்களது ஆட்சியின் கீழ் தமிழக மக்கள் வளம் மற்றும் மகிழ்ச்சியடைவார்கள் என நம்புகிறேன். 

வெற்றியின் பாதையில் பல உயரங்களை எட்டி, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக திகழ வேண்டும்.

நல்ல உடல்நலத்துடன் மக்கள் சேவையில் தொடர்ந்து பணியாற்ற எனது வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்' என குறிப்பிட்டிருந்தார்.

முதலமைச்சர் நன்றி :

இந்நிலையில்,  திமுக அரசின் ஓராண்டு நிறைவை ஒட்டி வாழ்த்து தெரிவித்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். 
*

Share this story