வருகைப் பதிவேட்டில் முறைகேடு நடந்ததா? : ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விளக்கம்

By 
sta1

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி ஒருவர், ஒரே நாளில் பல நாட்களுக்கான வருகை பதிவுக்கு கையெழுத்தடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

வருகைப் பதிவேட்டில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற தகவல் பரவியது. 

இதுகுறித்து விசாரிப்பதற்கு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்திருப்பதாக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் பாலாஜி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வருகைப் பதிவேட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என மருத்துவக் கல்லூரி விளக்கம் அளித்துள்ளது. 

‘முதுநிலை கலந்தாய்வின் இறுதிச்சுற்று நிறைவடைந்த நிலையில், மாணவர்களின் வருகைப்பதிவுக்காக வருகைப்பதிவேடு திறக்கப்பட்டது. 

மாணவி மற்ற மருத்துவர்களுக்கோ அல்லது தான் வராத நாட்களுக்கோ கையொப்பம் இடவில்லை. கையொப்பமிட்ட சம்பவம் குறித்து பயமாக இருப்பதாகவும், மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவி புகார் அளித்துள்ளார்’ என ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி தெரிவித்துள்ளது.
*

Share this story