சீனாவுடனான வர்த்தகத்தை ஏன் நிறுத்தக்கூடாது : கெஜ்ரிவால் கேள்வி
 

By 
kejriwal5

அருணாச்சலப் பிரதேசத்தின், தவாங் எல்லைப் பகுதியில் டிசம்பர் 9-ம் தேதியன்று சீன ராணுவப் படை அத்துமீறி நுழைந்ததாக, இந்திய ராணுவத்தினருக்கும், சீன ராணுவத்தினருக்குமிடையே தாக்குதல் நடைபெற்றது.

இது நாடு முழுவதும் பெரும் பேச்சுபொருளானது. இது குறித்து உரிய பதில் அளிக்குமாறு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தின.

இதனைத்தொடர்ந்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில், அருணாசலப் பிரதேசத்தின் தவாங்கில் உள்ள யாங்சே பகுதியில் உள்ள நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்ற சீனாவின் ராணுவம் மேற்கொண்ட முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்ததாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சீனாவுடனான வர்த்தகத்தை ஏன் நிறுத்தக்கூடாது என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில்,

"நாம் ஏன் சீனாவுடனான வர்த்தகத்தை நிறுத்தக்கூடாது..? சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.

சீனாவுடனான வர்த்தகத்தை நிறுத்துவதன் மூலம், நாம் சீனாவுக்கு பாடம் புகட்டலாம். அதே வேளையில், இந்தியாவில் வேலை வாய்ப்புகள் உயரும்" என்று கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார்.

Share this story