10,000-க்கும் கீழே குறைந்த கொரோனா பாதிப்பு.. இன்றைய பாதிப்பு குறித்து வெளியான தகவல்.!!
சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கரோனோ வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. கடந்தாண்டு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் மீண்டும் அதிதீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது.
இந்திய அளவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு லட்சத்தை தாண்டி வருகிறது. தமிழகத்திலும் இந்த வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து நாள் ஒன்றுக்கு 30,000 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் இன்றைய பாதிப்பு நிலவரங்களை வெளியிட்டுள்ளது தமிழக சுகாதாரத் துறை. இது குறித்த அறிக்கையில் இன்று 9,118 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,97,864 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 22,720 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 22,66,793 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 210 பேர் பலியானததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30,548 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாதிப்பு 600-க்கும் கீழாக பதிவாகியுள்ளது. இன்று சென்னையில் 559 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.