தமிழகத்தில் கனமழை பெய்யும் மாவட்டங்கள் : வானிலை மையம் தகவல்

By 
Districts with heavy rainfall in Tamil Nadu Meteorological Center Information

தமிழக கடற்கரையையொட்டி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

இதன் காரணமாக இன்று சேலம், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

20, 21-ந் தேதிகளில் தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும்.

22-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

23-ந் தேதி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். 

கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக திருபுவனம் 7 செ.மீ., கிளநிலை 4 செ.மீ., நாமக்கல் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

இந்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Share this story