விரைவு பஸ்களின் ஆயுட்காலம் 7 ஆண்டாக அதிகரிப்பு : தமிழக அரசு
அரசு விரைவு பஸ்கள் 3 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் என்று இருந்ததை, இனிவரும் காலங்களில் 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என்று மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசாணை :
தமிழகத்தில், இதுவரை அரசு போக்குவரத்து கழக பஸ்களின் ஆயுட்காலம் 6 ஆண்டுகளாக இருந்தது. அதேபோல், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களின் ஆயுட்காலம் 3 ஆண்டுகளாக இருந்தது.
இந்நிலையில், அரசு பஸ்கள் மற்றும் அரசு விரைவு பஸ்களின் ஆயுட் காலத்தையும், கண்டம் செய்யும் ஆண்டுகளையும் உயர்த்தி உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசு பஸ்கள் ஏற்கனவே 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் என்று இருந்ததை இனிவரும் காலங்களில் 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என்று அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், அரசு விரைவு பஸ்கள் 3 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் என்று இருந்ததை இனிவரும் காலங்களில் 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என்று மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நவீன வடிவமைப்பு :
தமிழகம் முழுவதும் தற்போது புதிய சாலைகள் போடப்பட்டு சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் நவீன தொழில்நுட்பம் கொண்ட பஸ்களும் விடப்பட்டுள்ளன.
அரசு பஸ்களின் நவீன வடிவமைப்பு காரணமாக, அதன் ஆயுட் காலத்தை உயர்த்தி போக்குவரத்து துறைச் செயலாளர் தயானந்த கட்டாரியா உத்தரவிட்டுள்ளார்.