சென்னையை சுற்றி வேகமாக நிரம்பும் ஏரிகள் : வெள்ள அபாய எச்சரிக்கை

By 
Fast filling lakes around Chennai Flood warning

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  

சென்னையில், கடந்த இரண்டு நாட்களாக கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் நீர் தேங்கி உள்ளது. 

பொதுப்பணித்துறை தகவல் :

சென்னையில்  தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், திருநீர்மலை, சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 58 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கொசஸ்தலை வடிநில கோட்டத்தில் உள்ள 336 இருக்கிறது. இந்த ஏரிகளில் 58 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பியுள்ளது. 

மேலும் 37 ஏரிகள் 76 சதவிகிதமும், 50 ஏரிகள் 51 சதவிகிதமும், 107 ஏரிகள் 50 சதவிகிதமும், 79 ஏரிகள் 25 சதவிகிதமும் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.

பூண்டி நீர்தேக்கத்தில் மொத்த உயரமான 35 அடியில், தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நீர்மட்டம் 33 .98 அடியாக உயர்ந்துள்ளது.

மொத்த கொள்ளளவான 3ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி நீரில், தற்போது, 2 ஆயிரத்து 786 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. 

நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 244 கன அடியாக உள்ள நிலையில், 4 ஆயிரத்து 883 கனஅடி நீர் திறந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில், 138 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. 

88 ஏரிகள் 70 சதவீதத்துக்கு மேலும் 48 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் நிரம்பி உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

அபாய எச்சரிக்கை :

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவான 23.3 அடி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மொத்த கொள்ளளவான 3ஆயிரத்து 645 மில்லியன் கன அடியில் தற்போது 2ஆயிரத்து 942மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 710 கன அடியாக உள்ள நிலையில், ஏரியிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 144 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. சுற்றி உள்ள  21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

அதேபோல, சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரி, அதன் மொத்த உயரமான 21 .20 அடியில், தற்போது 19.52 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி நீரில், தற்போது 2 ஆயிரத்து 916 கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு ஆயிரத்து 357 கனஅடியாக உள்ள நிலையில், 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

சோழவரம், மதுராந்தகம் ஏரிகள் :

சோழவரம் ஏரியில், அதன் மொத்த உயரமான 18.86 அடியில் தற்போது, 18 அடியாக உயர்ந்துள்ளது. 

மொத்த கொள்ளளவான ஆயிரத்து 81 மில்லியன் கனஅடியில், 908 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 520 கன அடியாக உள்ள நிலையில், ஆயிரத்து 200 கனஅடி நீர் திறந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23 .3 அடியை எட்டியது. நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியாக உள்ள நிலையில், அவை முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
*

Share this story