இந்தியாவில் முதல்முறையாக, நீருக்கு அடியில் ரயில் சேவை..

பொதுவாக மெட்ரோ ரெயில்கள் பாலத்திற்கு மேலேயும் பூமிக்கு அடியிலும் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால் தண்ணீருக்கு அடியில் செல்வதைப் பார்த்ததில்லை. இந்தியாவில் முதல் முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவையை கொல்கத்தா மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் தொடங்க உள்ளது.
இதற்காக கொல்கத்தா மாநிலத்தில் இருந்து ஹவுரா பகுதி வரை ஹூக்ளி ஆற்றின் நீருக்கு அடியில் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள இந்த மெட்ரோ சுரங்கப்பாதைகள், லண்டன் மற்றும் பாரிஸ் இடையேயான யூரோஸ்டார் ரெயில்கள் சேனல் சுரங்கப்பாதை வழியாகச் செல்வதைப் போலவே கட்டப்பட்டுள்ளன. நகரத்தின் கிழக்கு-மேற்கு பகுதியை இணைக்கும் இந்த வழித்தடம் மொத்தம் 16 கி.மீ தூரம் கொண்டது.
இந்தப் பாதை தண்ணீருக்கு அடியில் மட்டும் 4.8 கி.மீ சென்று, எஸ்ப்ளனடே பகுதியை ஹவுரா மைதானத்தோடு இணைக்கிறது. இந்த வழித்தடம் செயல்பாட்டிற்கு வந்தபிறகு ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இந்தப் பாதையில் செல்லும். இந்த சுரங்கப் பாதையில் வெற்றிகரமாக மெட்ரோ ரெயில் சோதனை நடத்தப்பட்டது.
அடுத்த மாத இறுதியில் எஸ்ப்ளனடே ஹவுரா மைதான் இடையேயான வழித்தடத்தை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சோதனை செய்வார். அதன் பிறகே இந்தப் பாதையில் மெட்ரோ போக்குவரத்து தொடங்கும். ரெயில் தண்டவாளங்கள் தண்ணீருக்கு அடியில் இருப்பதால் ரெயில்வே பாதுகாப்பு ஆணையரின் சோதனை அவசியமாகும். எப்படியும் டிசம்பர் மாத இறுதிக்குள் மெட்ரோ சேவை தொடங்கிவிடும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் கொல்கத்தா மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனின் மேலாண்மை இயக்குனர் ஸ்ரீவத்ஸா.
சுரங்கங்களுக்குள் தண்ணீர் வந்தால், கேஸ்கட்கள் திறக்கப்படும். நீர் உட்புகுவதற்கான தொலைதூர சாத்தியக்கூறுகளில், பாதுகாப்பான வெளியேற்றத்திற்காக டி.பி.எம்.கள் நீரில் மூழ்கும். மிகவும் அனுபவம் வாய்ந்த சுரங்கப்பாதை பணியாளர்களை ஆப்கான்ஸ் நிறுவனம் பயன்படுத்தியது. ஹுக்ளி ஆற்றில் அமைய உள்ள புதிய பாதை மூலம் தினசரி சுமார் 9 லட்சம் பேர் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹவுரா பாலத்தைக் கடக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.
இந்நிலையில், கிழக்குமேற்குப் பகுதிகளை இணைக்கும் நீருக்கடியிலான மெட்ரோ ரெயில் திட்டம், நகர மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என கருதப்படுகிறது.