பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் : காவல் ஆணையர் உத்தரவு
Updated: Jul 6, 2021, 12:23 IST
By
ஆன்லைன் விளையாட்டுகளில் டிப்ஸ் தருவதாக கூறி சிறுவர், சிறுமிகளிடம் யூ-டியூப்களில் ஆபாசப் பேச்சுகள் பேசியதாக பப்ஜி மதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் போலீசாருக்கு புகார்கள் வந்தன.
கைது :
இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதன் ஜாமீன் கோரி, மனுக்கள் தாக்கல் செய்தார்.
உத்தரவு :
இருமுறையும் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.