சம்பளத்துடன் விடுமுறை : அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் குறைப்பு..
கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில், தொற்று பாதித்தவர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தன.
சம்பளத்துடன் சிறப்பு விடுமுறை :
அதன்படி, 14 நாட்கள் சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.
அதுதவிர, கொரோனா பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமாகி சிகிச்சை பெறுபவர்களுக்கு, மருத்துவமனை ஆவணங்களின் அடிப்படையில், சிகிச்சை காலம் முழுவதும் சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுமுறையும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
மாற்றம் :
இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான இந்த சிறப்பு சலுகையில் கேரள அரசு மாற்றங்களை செய்துள்ளது.
அதன்படி, கொரோனா பாதிக்கப்படுபவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் விடுமுறை அளிப்பது 7 நாட்களாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
தனிமையில் இருக்கும் காலமும் 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. 7 நாட்கள் தனிமை முடிந்த பிறகு, நெகட்டிவ் ரிசல்ட் வந்தவர்கள் உடனே அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்.
கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு, கடந்த 3 மாதத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமாகி இருந்தால், அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*