60 கிராமங்களில், 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன : தமிழக சுகாதாரத்துறை
கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், தமிழகத்திலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இதுவரை, சுமார் 2 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தடுப்பூசி பணி குறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது :
தமிழகத்தில், 60 கிராமங்களில் 100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தில், அனைத்து கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கான தடுப்பூசி பங்கீட்டை 90% ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு 10% ஆகவும் வழங்க வேண்டும்' என்றார்.
*