60 கிராமங்களில், 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன : தமிழக சுகாதாரத்துறை

By 
In 60 villages, 100% have been vaccinated Tamil Nadu Health Department

கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

அந்த வகையில், தமிழகத்திலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் இதுவரை, சுமார் 2 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி பணி குறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது :

தமிழகத்தில், 60 கிராமங்களில் 100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தில், அனைத்து கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

மாநிலங்களுக்கான தடுப்பூசி பங்கீட்டை 90% ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு 10% ஆகவும் வழங்க வேண்டும்' என்றார்.
*

Share this story