சுதந்திர தின விழா : சென்னையில், ரூ.1.83 கோடியில் நினைவுத்தூண்..

By 
Independence Day Celebration In Chennai, a monument worth Rs 1.83 crore ..

 நாட்டின் 75-வது சுதந்திர தினம் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளது.

மேலும், ஒவ்வொரு கிராமத்திலும் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், 75-வது சுதந்திர தினத்தையொட்டி ரூ.1.83 கோடியில் நினைவுத் தூண் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை காமராஜர் சாலையில், 75-வது சுதந்திர தின நினைவுத் தூண் ரூ.1.83 கோடியில் அமைக்கப்படுகிறது. இதற்கான டெண்டர் அறிவிப்பை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

ஒரு மாதத்திற்குள் நினைவுத்தூண் கட்டப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

* தமிழகத்தில், பள்ளிகள் திறப்பு குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என அமைச்சர் மகேஷ் அன்பில் பொய்யாமொழி இன்று தெரிவித்தார்.

Share this story