அமெரிக்காவை முந்தியது இந்தியா; எதில் தெரியுமா?
தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கைகளில் அமெரிக்காவை முந்தி, இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
மே 1-ம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. தொடர்ந்து நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமெடுத்துள்ளது.
இந்தியாவில், இன்று காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 32,36,63,297 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவில், இதுவரை மொத்தம் 32,33,27,328 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
நாடு, தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய தேதி, இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள்
இங்கிலாந்து டிசம்பர் 87,67,74,990
அமெரிக்கா டிசம்பர் 1432,33,27,328
இத்தாலி டிசம்பர் 274,96,50,721
ஜெர்மனி டிசம்பர் 277,14,37,514
பிரான்ஸ் டிசம்பர் 275,24,57,288
இந்தியா ஜனவரி 1632,36,63,297