தடுப்பூசி போட்டால் மட்டுமே சம்பளம் : ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு

By 
Salary only if vaccinated Action order for employees

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைவருக்கும் தேவஸ்தானம் சார்பாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திருமலைக்கு வருவதால், தேவஸ்தானத்தில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.

திருமலை மட்டுமல்லாது, திருப்பதியில் உள்ள மத்திய மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி போடுவது தொடங்கப்பட்டது.

இந்நிலையில், 45 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களில் சிலர் இதுவரை தடுப்பூசி போடவில்லை என தேவஸ்தானம் கண்டறிந்துள்ளது.

அவர்கள் அனைவரும் ஜூலை 7-ந்தேதிக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசி  போட்டால் மட்டுமே ஜூலை மாத ஊதியம் வழங்கப்படும்.

அதுவரை அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படமட்டாது' என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

Share this story