ஐயப்பன் கோவில் நடை 16-ந்தேதி திறப்பு : பக்தர்கள் முன்பதிவு..

By 
ayya

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளில் திறக்கப்படுவது வழக்கம். 

அந்த வகையில், ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 

அன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கருவறையை திறந்து வைக்கிறார். 

17-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 

அன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடைபெறும். 

21-ந்தேதி வரை, நடை திறந்து இருக்கும். பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதற்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
*

Share this story