குற்றாலநாத சுவாமி தேரோட்டம்; மற்றும் நிகழ்ச்சிகள் விவரம்..

By 
kutralam2

தென்காசி மாவட்டம். குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசி விசு திருவிழா நடைபெறும்.

அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி, வருகிற 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், சுவாமி - அம்பாள் வீதி உலா ஆகியன நடைபெறுகிறது. வருகிற 12-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 13-ந் தேதி விநாயகர், முருகன், குற்றாலநாத சுவாமி, குழல்வாய்மொழி அம்மை ஆகிய நான்கு தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றன.

15-ந் தேதி காலை 9.30 மணிக்கும் இரவு 7 மணிக்கும் நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 16-ந் தேதி காலை 10.30 மணிக்கு சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.

விழாவின் கடைசி நாளான 18-ந் தேதி காலை 10.40 மணிக்கு விசு தீர்த்தவாரியும், ரிஷப வாகன காட்சியும், இரவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கின்றது.

Share this story