ஸ்ரீரங்கம் கோவிலில், 9 நாட்கள் சொர்க்க வாசல் திறப்பு..

By 
srurangam3

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திங்கட்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

தொடர்ந்து இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். விழாவின் ராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெறும்போது பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறக்கப்படும். 7-ம் திருநாளான வருகிற 8-ந்தேதி மட்டும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

8-ம் திருநாளான 9-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. 9-ம் திருநாளான 10-ந் தேதி பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். ராப்பத்து நிகழ்ச்சியின் 10-ம் நாளான 11-ந்தேதி காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

திறக்கப்படும் சொர்க்கவாசல், மேலும் 8 நாட்களுக்கு தினமும் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட நாட்களில் மூலவர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ராப்பத்து நிகழ்ச்சிகளிலும் நம்பெருமாள் ரத்தின அங்கி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

*

Share this story