கள்ளழகர் கோவில் ஆடித்திருவிழா : நிகழ்ச்சிகள் விவரம்..

By 
kallaagar

தென் திருப்பதி என அழைக்கப்படும் மதுரை அருகே உள்ள கள்ளழகர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக, ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில், இந்த ஆண்டு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. 

அதன்படி, நேற்று வியாழக்கிழமை காலையில் 8.15 மணிக்கு மேல் 9 மணிக்குள் இக்கோவிலில் கொடியேற்றத்துடன் ஆடி பெருந்திருவிழா தொடங்கியதுது. 

இதைத்தொடர்ந்து, இன்று, 5-ந் தேதி காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் சிம்ம வாகனத்திலும் சகல பரிவாரங்களுடன் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. 

நாளை 6-ந் தேதி மாலையில், அனுமார் வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 

7-ந் தேதி மாலையில் கருட வாகனத்தில் புறப்பாடு, 8-ந் தேதி காலையில் 6.45 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கள்ளழகர் பெருமாள், கோவிலில் இருந்து புறப்பட்டு, மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று எழுந்தருள்கிறார். மாலையில் சேஷ வாகனத்தில் சுவாமி காட்சி தருகிறார். 

9-ந் தேதி மாலையில் யானை வாகனத்திலும், 10-ந் தேதி மாலையில் புஷ்ப சப்பரத்திலும் சுவாமி காட்சி தருகிறார். 

11-ந் தேதி மாலையில் தங்கக்குதிரை வாகனத்தில் பெருமாள் காட்சி தருகிறார். 

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 12-ந் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு மேல் 4.35 மணிக்குள் சுவாமி தேவியர்களுடன் திருத்தேருக்கு எழுந்தருள்கிறார். 

இதைத்தொடர்ந்து, காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நடைபெறுகிறது.

இரவு, பூப்பல்லக்கு விழா 13-ந் தேதி மாலையில் புஷ்ப சப்பரம், 14-ந் தேதி உற்சவ சாந்தியுடன், இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. 
*

Share this story