திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில், இன்று லட்ச வில்வார்ச்சனை சேவை..

By 
kapi4

* திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் இன்று  (சனிக்கிழமை) காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை, லட்ச வில்வார்ச்சனை சேவை நடக்கிறது. 

மாலை உற்சவர் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

* ஆனைமலையில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருமாங்கல்ய சிறப்பு பூஜை நடைபெற்றது. 

தொடர்ந்து ஸ்ரீ ரங்கநாத பெருமாளுக்கு 9 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இதையடுத்து பூக்கள், மற்றும் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

9 பழங்கள் வைத்து பெண்களுக்கு திருமாங்கல்யம் வேண்டி தீபாராதனை காண்பித்து பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
*

Share this story