சபரி மலையில், புரட்டாசி மாத நடை திறப்பு எப்போது?

By 
sabari3

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஓணப்பண்டிகை சிறப்பு வழிபாடுகளுக்காக கோவில் நடை கடந்த 6-ந் தேதி திறக்கப்பட்டது.

ஓணப்பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன.

கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு ஓண விருந்தும் வழங்கப்பட்டது.

ஓணப்பண்டிகை முடிவடைந்ததை தொடர்ந்து நாளை இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

இதையடுத்து புரட்டாசி மாத பூஜைக்காக வருகிற 16-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது.

Share this story