சிதம்பரம் நடராஜர் கோவில் : இன்று முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி விழா

By 
 Chidambaram Natarajar Temple Today is the Muthuppallaku program

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில், பக்தர்கள் புடைசூழ தேரோட்டம் நடந்தது. 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோ‌ஷங்களை எழுப்பியவாறு, தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். 

4 ரதவீதிகளில் வலம் வந்த தேர், கீழரத வீதியில் நிலையை அடைந்தது. பின்னர், இரவு முழுவதும் சிறப்பு தீபாராதனை நடந்தது. 

நேற்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை, ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது.

ஆருத்ரா தரிசனம் :

காலை 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகளின் வீதிஉலா காட்சி நடந்தது. மாலை 3 மணியளவில், ஆருத்ரா தரிசன விழா நடந்தது. 

இதையொட்டி, சிவகாமசுந்தரி சமேத நடராஜர் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, முன்முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் முன்னும் பின்னுமாக 3 முறை சுற்றி வந்து, நடனமாடி பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சி அளித்தார்கள்.

இதனையடுத்து, நடன பந்தல் வழியாக சுவாமிகள் கோவிலின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு, சித்சபை ரகசிய பிரவேசம் நடைபெற்றது. பின்னர், சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. 

முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி :

ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் உள்ள 4 ரத வீதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

இன்று (21-ந் தேதி) முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.

Share this story