12 பாவங்களுக்கு, மன்னிப்பு கிடையாது.!
'மனசாட்சியையும் தாண்டி, மனிதர் என்ற போர்வையில் செய்யும் பாவத்திற்கான பதில் சிவனிடம் கிடைக்கும்' என்று இந்து சமயம் கூறுகின்றது. அவ்வாறு சிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத பாவங்கள் எவை தெரியுமா?
பாவம்-1 :
அடுத்தவரின் மனைவியை அல்லது கணவன் மீது ஆசைப்படுவது பாவம்.
பாவம்-2 :
அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு, அவரின் சொத்துகளை அபகரிக்க நினைப்பது மகா பாவத்தில் அடங்கும்.
பாவம்-3 :
உங்களின் சுய நலத்திற்காக எளியவர்களின் கனவை, வாழ்வை அழிப்பது, அவர்களின் மீது இல்லாத பழியை சுமத்துவதும் சிவனின் மூன்றாவது கண்களிலிருந்து தப்பிக்க முடியாத பாவம். அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது மகா பாவத்தில் அடங்கும்.
பாவம்-4 :
ஒருவன் தொடர்ந்து தீய வழியிலே செல்வது, அல்லது சிறிதும் நன்மைகூட அடுத்தவர்களுக்கு செய்யாமலிருப்பது இரண்டுமே சிவனின் கோபத்திற்கு ஆளாகும் பாவங்கள்.
பாவம்-5 :
கர்ப்பிணிகளிடம் மிக மோசமான நடந்துகொள்வதும், அவர்களை தீய வார்த்தைகளால் திட்டுவதும், அதேபோல் மாதவிலக்கின்போது பெண்களைத் திட்டுவதும் பாவத்திற்கான வழிகளாகும்.
பாவம்-6 :
இன்னொருவரைப் பற்றி, அப்படமான பொய் கூறி, அவரை சீர்குலைய வைப்பதும் சிவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
பாவம்-7 :
வதந்திகளையும், தேவையில்லாத விஷயங்களையும், மனதிற்கு நிம்மதியளிக்காத செய்திகளையும் எல்லாரிடம் பரப்புவது மோசமான செய்கையாகும். இதனால், சிவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
பாவம்-8 :
ஒருவரின் செய்கையால், மற்றொருவரின் வாழ்வு நாசமானால், அதுவும் மிகப் பெரிய பாவம். அடுத்தவரை கொலை செய்வது, அழிப்பது போன்றவைகளாகும்.
பாவம்-9 :
இந்து சமயம், சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது என்று சொல்லியும், அவ்ற்றை சாப்பிடுவது பாவச் செயல். உதாரணத்திற்கு தெய்வமாக பார்க்கப்படும் மாட்டை உண்பது.
பாவம்-10 :
வன்முறையை கையாள்வது. குழந்தைகளுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் செய்யும் வன்முறைகள் மன்னிக்கமுடியாத பாவமாகும்.
பாவம் -11 :
மாதா, பிதா, குரு மற்றும் வயதானவர்களை மரியாதையின்றி நடத்துவது, அவர்களை அடித்துத் துன்புறுத்துவது போன்றவையால் இறைவன் கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும்.
பாவம்-12 :
முறையற்ற வழியில் சொத்து சேர்ப்பது, தானமாகக் கொடுத்த பொருளை, திரும்ப வாங்குவதும் பாவத்தின் கணக்கில் அடங்கும்.