கோமுக தீர்த்தத்தின் மகிமை.!

By 
Glory to Gomuga Theertham!

மிக மிக சாதாரணமாக கிடைக்கும் விலை மதிப்பில்லாத சில விஷயங்கள்,  கண்களுக்கு புலப்படுவதே இல்லை. அப்படி தெரிந்தாலும், அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை. 

இக்கால கட்டத்தில் இதைச் செய்தால், நல்லது என்று கூறுவதற்குக்கூட நேரம் இல்லாமல் போய்விட்டது. 

அரிய பல புண்ணிய பொருட்களில் சில, சாதாரணமாகக் கிடைக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அவற்றில், திருத்தலங்களில் தெய்வ கருவறையில் இருந்து வெளியேறக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கோமுகமும் ஒன்றாகும். இந்த கோமுகத்திலிருந்து வரும் புனித தீர்த்தம் மிகுந்த சக்தி வாய்ந்தது. இது குறித்து பார்ப்போம்.

புண்ணிய நதிகளை விடவும் மகிமை :

கோவிலுக்குச் செல்லும்போது, பலர் இந்த கோமுகத்திலிருந்து கிடைக்கும் புனித நீரை தலையில் தெளித்துக் கொள்வதை பார்த்திருப்போம். சிலர் பிடித்துக்கொண்டு வீட்டிற்கும் எடுத்துச் செல்வர். இன்னும் சிலர் பார்ப்பதற்கு அசுத்தமாக தெரிவதால், என்னவென்றே தெரியாமல் சென்றுவிடுவர்.

கோவில் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் தெய்வ சிலைகளுக்குச் செய்யப்படும் அபிஷேக பொருட்கள் இறைவனின் திருமேனிமீது பட்டு வழிந்து கருவறையிலிருந்து இந்த கோமுகம் வழியாகத்தான் வெளியேறும். இங்கு பற்பல கோடி தேவதைகள் குடி கொண்டிருப்பதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 

பூமியில் ஓடும் கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதிகளின் பலன்களைவிட, இந்த கோமுக தீர்த்தம் மகிமை வாய்ந்தது. இந்த புண்ணிய நதிகளே கோமுக தீர்த்தத்தை தெளித்து தூய்மை அடைவதாக சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தனிச்சிறப்புகள் :

கோவிலுக்குச் செல்லும் போது, கோமுக நீரை தெளித்துக் கொள்வதால், நம்மிடம் இருக்கும் தீவினைகள் ஒழிந்து, மனம் சுத்தமாகும் என்பது ஐதீகம். 

விசாக நட்சத்திரத்தன்று இந்த புனித தீர்த்தத்தை ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்துக் கொண்டு சென்று வீட்டில், உங்கள் வியாபார ஸ்தலங்களில், பணம் வைக்கும் இடத்தில், வாகனம் மற்றும் குடும்ப நபர்களின் மீதும் தெளித்துவிட வேண்டும். இதனால், வளம் பெருகி செல்வ செழிப்பு உண்டாகும். 

பரணி, மகம் நட்சத்திரத்தன்று பிடித்துக்கொண்டு வரப்படும் கோமுக தீர்த்தத்திற்கு தனிச் சிறப்புண்டு.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கும். இந்த இரண்டு நட்சத்திரங்களன்று தெளித்துக் கொள்வதால், விபத்துகள் ஏற்படாது. எம பயம் நீங்கும். கோமுக நீரைக் கொண்டு வந்து பூஜை அறையில் எப்போதும் இந்த நீரை வைத்திருக்கலாம். 

முக்கிய நட்சத்திரத்தன்று இதே போல் செய்வதால், சகல தோஷங்கள் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. 

எந்த விதமான கண் திருஷ்டியும் நீங்கும். கெட்ட கனவுகள் வந்து பயமுறுத்தாது. இந்த தீர்த்தத்தை அருந்துவதால், தீராத பிணிகள் தீரும். 

நட்சத்திரங்களும் பலன்களும் :

மேலும், ஒவ்வொரு நட்சத்திரத்தன்றும் பல்வேறு பலன்களை பெறலாம்.

கார்த்திகை நட்சத்திரத்தன்று கோமுக தீர்த்தத்தை தெளித்துக் கொள்வதால், பிரிந்த தம்பதியர் விரைவில் ஒன்று சேருவார்கள். 

ரோகிணி நட்சத்திரத்தன்று தெளித்துக் கொள்வதால், குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பிறக்கும். 

திருவாதிரை நட்சத்திரத்தன்று தெளித்துக் கொள்வதால், ஆரோக்கியம் சீர்படும். 

புனர்பூசம் நட்சத்திரத்தன்று தெளித்துக் கொள்வதால், திருமண தடை நீங்கும். 

பூசம் நட்சத்திரத்தன்று தெளித்துக் கொள்வதால், பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும். 

அஸ்தம் நட்சத்திரத்தன்று தெளித்துக் கொள்வதால், உதவிகள் கிட்டும்.

Share this story