திருப்பதியில் பவித்ர உற்சவம் : இன்று முதல் 3 நாள் யாகம்-கோபூஜை
 

By 
Sacred Festival at Tirupati Yagam-Gopuja for the first 3 days from today

திருப்பதியில், ஆண்டுதோறும் தோ‌ஷம் களையும் முக்கியமான உற்சவமான பவித்ரோற்சவத்தை ஆடி மாதம் தேவஸ்தானம் நடத்தி வருகிறது. 

அதன்படி, இன்று 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ஏழுமலையான் கோவிலில் பவித்ர உற்சவம் நடைபெற உள்ளது.

பவித்ரோற்சவம் நிறைவு :

இதையொட்டி, 18-ந்தேதி பவித்ர பிரதிஷ்டை, 19-ந்தேதி பவித்ர சமர்ப்பணம், 20-ந்தேதி மகா பூர்ணாஹுதியுடன் வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவுபெற உள்ளது.

இந்நாட்களில், கோவிலில் உள்ள மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையானை எழுந்தருள செய்து, அங்கு 3 நாட்கள் யாகம் வளர்த்து, இந்த உற்சவத்தை தேவஸ்தானம் நடத்துகிறது.

இந்த 3 நாட்களும் திருமலையில், ஏழுமலையானுக்கு நடக்கும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் ஆர்ஜித சேவைகள் 3 நாட்களும் ஒளிபரப்பாகாது. அதற்கு பதிலாக, பவித்திர உற்சவம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.

கோபூஜைக்கு அனுமதி :

திருப்பதி கோசாலையில், வருகிற 30-ந்தேதி கொரோனா நிபந்தனைகளுடன் கோ பூஜை நடக்கிறது. இந்த நாளில், பக்தர்கள் பசுகளுக்கு பூஜை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால், இந்த ஆண்டு கொரோனா நிபந்தனைகளுடன் கோபூஜை நடைபெற உள்ளதால், பக்தர்களுக்கு கோசாலையில் பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 

Share this story