4 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் : சபாநாயகர் அதிரடி உத்தரவு

By 
congress4

மக்களவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் விலைவாசி உயர்வைக் கண்டித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். 

இதனால், அவை மதியம் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், மதியம் 3 மணிக்கு மீண்டும் அவை கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். 

இதனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 மக்களவை உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அறிவித்தார். 

மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் டி.என்.பிரதாபன் ஆகிய 4 பேரை அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடப்பு கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
*

Share this story