ஒத்துப் போ.. இல்லை, ஒதுங்கிக்கோ.. இல்லை, உள்ளே போ : ஈபிஎஸ்.க்கு, ஓபிஎஸ் தரப்பு மீண்டும் கேள்வி

By 
marudhu39

தமிழகம் வருகை தந்த  பிரதமர் மோடி.. பங்கேற்ற நிகழ்ச்சியில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கை அமர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வை சுட்டிக்காட்டி, அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் மீண்டும்  எழுப்பியுள்ள கேள்வி வருமாறு :

'ஓ.பி.எஸ் அருகிலேயே உட்கார மாட்டேன்' என அப்பாவு சபாநாயகரிடம் அடம்பிடித்த எடப்பாடி,

இப்ப மட்டும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.க்கு அடுத்துதான் உனக்கான
இடம் என்ற போதும், பொத்திக்கொண்டு பூங்கொத்தோடு நின்றது ஏன்.?

தனது அரசியலே காலாவதி ஆகிவிடும் என்ற அச்சத்தாலா? இல்லை, அபகரிப்பு
முயற்சி அம்பேல் ஆகிப் போனதாலும், அதனை ஆதரிக்காத பா.ஜ.க.வை பல்லைக்காட்டி ஏமாற்ற நடத்துகிற பம்மாத்தா.? சொல்லுங்க மிஸ்டர் தவழ்ந்த சாமி..

ஆக, ஒத்துப் போ.. இல்லை, ஒதுங்கிக்கோ.. இல்லை, உள்ளேபோ.. எப்படி உங்க வசதி.?

இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this story