அந்த காலக்கட்டத்தில், இந்தியா எடுத்த முடிவு மிகவும் தவறானது : அண்ணாமலை
 

By 
annamalai4

சென்னை தி.நகரில், இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கூறியுள்ளதாவது :

இலங்கை போர் உச்சக் கட்டத்தில் இருக்கும்போது, நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால் தமிழர்கள் யாரும் இறந்திருக்க மாட்டார்கள். அந்த காலக் கட்டத்தில் இந்தியா எடுத்த முடிவு மிகவும் தவறானது. 

இலங்கை பிரச்னைக்கான தீர்வை கொடுக்கின்ற ஒரே ஒரு மனிதர் நரேந்திர மோடியைத் தவிர யாரும் கிடையாது. 

ஈழ தமிழ் மக்கள் இந்தியாவின்மீது கடும் கோபத்தில் இருந்தனர். இலங்கை இறுதிப் போரில் இந்தியா தமிழர்களுக்கு ஆதரவு தராததால் நம்மை அவர்கள் நம்பாமல் இருந்தனர்.

ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. யாழ்ப்பாணக் கலாசார மையத்தை மோடி கட்டிக் கொடுத்துள்ளார். 

இலங்கை தமிழர் விவகாரத்தில், மோடி சரியான வகையில் காய் நகர்த்தி வருகிறார். 

தனி ஈழம் உருவாக்கப்பட்டால், உலகத்தில் சிறிய நாடாக அதுதான் இருக்கும். இலங்கைக்கு இதுவரை 20,000 கோடி ரூபாய்க்கு மேல் இந்தியா உதவி செய்துள்ளது.

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாக இருந்தாலும், அதைச்சுற்றி மீன்பிடிக்க நமக்கு உரிமை இருந்தது. 

அதைத்தான் கச்சத்தீவு ஒப்பந்தத்தில் பிரிவு 6 கூறுகிறது. அவசர நிலை காலக் கட்டத்தில் யாருக்கும் தெரியப்படுத்தாமல் மறைமுகமாக பிரிவு 6-ஐ ரத்து செய்தனர். 

மோடி வைரம் என்று எனக்குத் தெரியும், ஆனால், அவரைப் பற்றி யாரும் இங்கு பேசவில்லை. 

அதனால், நான் பேசவேண்டிய சூழல் உள்ளது. மோடி உரக்கப் பேசினால் அமெரிக்காவே கேட்கும்' என்றார்.
*

Share this story