அதெல்லாம் பேசவே மாட்டாரு எடப்பாடியாரு : ஓபிஎஸ் தரப்பு சரமாரி கேள்வி
Nov 4, 2022, 00:37 IST
By
எடப்பாடி பழனிசாமியின் வாய்மை குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர், அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகு அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :
கொடநாடு
விவகாரம்
குறித்து பேசமாட்டாரு..
கூவத்தூர்
ரகசியம்
குறித்து
பேசவே மாட்டாரு..
ஆறுமுகசாமி
ஆணைய
அறிக்கையில்
விஜயபாஸ்கர்
விவகாரம்
குறித்து
பேசமாட்டாரு..
தூத்துக்குடி
துப்பாக்கிச் சூடு
சம்பவம்
குறித்தான
விசாரனை
அறிக்கை
அம்பலப்
படுத்தியிருக்கும்
தனது பொய்
குறித்து
பேசமாட்டாரு..
ஆனா...
சம்பந்தி
மகன் மீது
வழக்குன்னா
மட்டும்
புது டெல்லி
வரைக்கும்
போய் பேசுவாரு...
அப்படித்
தானே..
இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
*