காங்கிரஸ் புதிய தலைவருக்கு, இதயம் கனிந்த வாழ்த்துகள் : பிரதமர் மோடி

By 
pmmodijic

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 17-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவும், சசி தரூரும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டது. இதில் மல்லிகார்ஜூன கார்கே மொத்தம் 7,897 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சியின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,

காங்கிரஸ் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கேவுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள். அவரின் எதிர்காலம் இனிமையானதாக அமைய எனது வாழ்த்துக்கள். வரவிருக்கும் காங்கிரஸ் தலைவர் பதவிக்காலம் அவருக்கு சிறப்பானதாக அமையட்டும் என பதிவிட்டுள்ளார்.

Share this story