நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன்; உங்கள் சொற்படியே நடக்கிறேன் : மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

By 
mks5

திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றுடன் 4 ஆண்டு நிறைவடைந்து 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

இதையொட்டி மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:-

தகைசால் தந்தையே!

தன்னிகரற்ற தலைவரே!

முதல்வர்களில் மூத்தவரே!

கலையுலக வேந்தரே! எங்களின் உயிரே! உணர்வே!

தாங்கள் வகித்த தி.மு.க. தலைவர் பொறுப்பில் நான் அமர்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.

ஒவ்வொரு அடியும் - நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன்.

அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன்!

மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள்! இவ்வாறு அவர் கூறினார்.
 

Share this story