அரசியல் சதுரங்கம் : ஓ.பன்னீர்செல்வம் மீது 7 வழக்குப்பதிவு..

By 
opsg7

சென்னை அருகே வானகரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தியபோது, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் அங்கு குவிந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஓபிஎஸ் தரப்பினர் அலுவலக கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். பொருட்கள் சூறையாடப்பட்டன.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆவணங்களை திருடிச் சென்றதாக சி.வி.சண்முகம், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் மீது 7 வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Share this story