அரசியல் சதுரங்கம் : காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்..

By 
8c

கோவா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் உள்ளார்.

40 இடங்களை கொண்ட கோவா சட்டசபையில் ஆளும் பா.ஜனதாவுக்கு 20 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த நிலையில் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று பா.ஜனதாவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக கோவா மாநில பா.ஜனதா தலைவர் சதானந்த ஷெட் தனவாடே கூறும் போது, 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைய இருக்கிறார்கள் என்று உறுதியாக தெரிவித்தார்.

திகம்பர் காமத், மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, ராஜேஷ் பால்தேசாய், கேதார் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலெக்சியோ செக்வேரா, ரூடால்ப் பெர்ணான்டஸ் ஆகிய 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை சபாநாயகரை சந்தித்து பேசி இருந்தனர். சட்டசபை கூட்டத் தொடர் நடக்காத நிலையில் சபாநாயகரை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தது அவர்கள் பா.ஜனதாவில் சேருவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

இன்று கோவா மாநில முதல்-மந்திரியை 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினர். அதன் பிறகு அவர்கள் பா.ஜனதாவில் இணைந்தனர். இதனால் கோவா மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூடாரம் காலியானது. அக்கட்சிக்கு 3 எம்.எல்.ஏ.க்களே தற்போது உள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் திகம்பர் காமத், மைக்கேல் லோபோ உள்ளிட்ட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர உள்ளதாக தகவல் வெளியானது

Share this story