கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு..
 

By 
pm modi35

பிரதமர் மோடி இன்று மற்றும் நாளை  கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இன்று, பெங்களூருவில் ரூ.27,000 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். 

முதல் ரயில் நிலையம் :

இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையத்தை திறந்து வைத்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 

பெங்களூரு கண்டோன்மென்ட் யஷ்வந்த்பூர் சந்திப்பு ரயில் நிலைய மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களுக்கு, பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். 

பார்த்தசாரதி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

டாக்டர் பி ஆர் அம்பேத்கர் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் பல்கலைக்கழக புதிய வளாகத்தை பெங்களூருவில் பிரதமர் திறந்து வைக்கிறார். 

யோகா பயிற்சி நிகழ்ச்சி :

மைசூருவில் உள்ள ஸ்ரீ சுத்தூர் மடத்துக்குச் செல்லும் பிரதமர், ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோயிலுக்குச் செல்கிறார். 8-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, 

நாளை காலை 6.30 மணியளவில், மைசூர் அரண்மனை மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்டமான யோகா பயிற்சி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
*

Share this story