ராகுல் ஒரு போர் வீரர் : பிரியங்கா கருத்து

By 
priyanka3

பாத யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியிலிருந்து உத்தரபிரதேசம் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளார்.

லோனி எல்லையில் வரவேற்ற பிரியங்கா காந்தி, "அதானி, அம்பானி போன்ற பெரிய தொழிலதிபர்கள் பல அரசியல்வாதிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களை விலைக்கு வாங்கியிருக்கலாம், ஆனால் என் சகோதரரை ஒருபோதும் வாங்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரியங்கா காந்தி கூறியதாவது:- கன்னியாகுமரியில் இருந்து 3,000 கி.மீ தூரம் கடந்து உத்தரப்பிரதேசத்தில் நுழைந்த ராகுல் காந்தியின் யாத்திரையை வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். ராகுல் காந்தி குளிர்காலத்தில் கூட குளிர்ச்சியாக இருப்பதில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். இதற்குக் காரணம் அவர் உண்மையின் கவசம் அணிந்துள்ளார் என்பதுதான்.

என் மூத்த சகோதரனைப் பாருங்கள். நான் உன்னைப் பற்றி அதிகளவில் பெருமைப்படுகிறேன். ராகுல் காந்தியின் இமேஜை அழிக்க அரசாங்கம் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழித்தது. ஆனால், அவர் உண்மையின் பாதையில் இருந்து பின்வாங்கவில்லை. அவர் ஒரு போர்வீரன் என்பதால் அவர் எதற்கும் பயப்படவில்லை.

அதானி, அம்பானி போன்ற பெரிய அரசியல்வாதிகளை கொண்டு வந்தார்கள். அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும், ஊடகங்களையும் வாங்கினார்கள். ஆனால் அவர்களால் என் சகோதரனை வாங்க முடியவில்லை. ஒருபோதும் அவ்வாறு செய்ய முடியாது.

உத்தரபிரதேசத்தில் உள்ள அனைவரும் இந்த 'மொஹபத் கி துகானின்' (அன்பை பரப்புவதற்கான கடை) உரிமையைத் திறக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Share this story