முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை-விசாரணை
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, எஸ்.பி.வேலுமணி தனது பதவியை தவறாக பயன்படுத்தி, ஒப்பந்தங்களை தனது சகோதரர் மற்றும் நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக புகார் எழுந்தது.
மேலும், டெண்டர்கள் மூலம் முறைகேடு செய்து சொத்து குவித்ததாகவும் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து, சென்னையில் எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான வீடுகள் உட்பட 52 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.