சட்டசபைத் தேர்தலில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர் : ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

By 
kar2

சென்னை கிரின்வேஸ்சாலையில் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:- 

* ஈபிஎஸ் கூட்டிய பொதுக்குழு தொண்டர்களுக்கு சம்பந்தமில்லாத போலியானது. 

* பொதுக்குழுவை தலைமை நியமிக்கிறது. தலைமையை பொதுக்குழு தேர்வு செய்கிறது. 

* அதிமுகவில் நிலவும் மாயை, மக்கள் மன்றத்தில் சென்றால் தான் விலகும். 

* அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போதெல்லாம் மக்கள் சரியான தீர்ப்பை வழங்கி உள்ளார்கள். 

* ஓபிஎஸ் தரப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் கால்பந்தை போல் அலைக்கழிக்கப்படுகின்றன. 

* ஓபிஎஸ் தரப்பில் வருகிற 24ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடைபெறும். 

* மாநாட்டிற்கு பிறகு மாவட்டந்தோறும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். 

* எட்டு தோல்விகளை சந்தித்தது தான் சூப்பர் எம்ஜிஆர் (ஈபிஎஸ்) செய்த சாதனை. இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

 * எம்.ஜி.ஆர். வேடத்தில் ஈபிஎஸ்ஸை பார்த்து தொண்டர்களும், பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர். 

* நாளை சென்னை வரும் பிரதமரை வாய்ப்பு இருந்தால் சந்திப்பேன். 

* ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக ஆளுநரின் பேச்சு குறித்து கருத்து கூற விரும்பவில்லை. 

* கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் எங்கள் தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Share this story