கவுன்டவுண் ஸ்டார்ட்ஸ் :ஓபிஎஸ் தரப்பு எனர்ஜி.. 

By 
marudhu110

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள கவிதைச்செய்தி வருமாறு :

* அருகம் புல்
அல்ல 

நாம்
ஆலமரம்
என்பதை 

உலகுக்கு
சொல்ல
உகந்த வேளை 
வந்தது;

பூப் பாதை
விட்டு

சிங்கப்பாதை
தொடர்ந்து ,

பணியாத
செல்வம்
என்பதை

பகைக்கு
உணர்த்தவே

உகந்த தருணம் 
உதித்தது.

* விரோதம்
துரோகம்

ஒரு சேர
இரண்டுக்கும்

ஓங்கி அடி
கொடுத்திட

தகுந்த காலம் 
பிறந்தது;

நாம் இல்லா
இடம்

அது நடமாட
முடியாத
ஜடம் என்பதை

எடுத்துச்
சொல்லிட

ஏற்ற நேரம்
வந்தது.

* தேய்தல்
வளர்தல்
திங்களுக்கு
உண்டு,

மறைந்து
எழுவது
கதிரவனுக்கு
உண்டு..

ஆனால்,

நிலையான
வானம் நாம்

நிகரில்லா
மானம் என்பதை

சலருக்கும்
புரிய
வைக்க

சந்தர்ப்பம்
வந்தது.

* பெல்ட் பெல்ட்
என்று பேசும் 

பில்டப்
பேர்வழிகளுக்கு

எல்லோருக்கும்
பெல்ட் இருக்கு
என்பதனை

நாமும் உணர்த்திடும்
நல்வாய்ப்பு
துவங்குது,

கிள்ளி வீசிட
நாம்
ஒன்றும்

மல்லித்தழை
இல்லை என

மார் தட்டி
சொல்லிடும்

போர்க்கோலம் ஒன்று

புறப்பாடு
புரியிது.

* விசுவாசம்
வீழாது

துரோகம்
ஒரு போதும்
வாழாது
என்பதனை

வரலாறாய்
சொல்வதற்கு

வாய்ப்பு
ஒன்று
மலருது.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். 

Share this story