விமானமும் பறிபோன மானமும் : ஓபிஎஸ் தரப்பு விளாசல்

By 
marudhu120

ஒருத்தன் நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்டால்.. பதிலற்ற கோழைகள் திராணியற்ற மூடர்கள் முதலில் தாக்குகிறார்கள்.

அடுத்து.. கிரிமினல் போதைப் பேர்வழி, பொறம்போக்கு, அட்ரஸ் இல்லாதவன் என்றெல்லாம் கேள்வி கேட்டவரை நோக்கி அவதூறு பரப்புகிறார்கள்.

இன்றுவரை மனிதன் ஆகாதவர்கள், நாங்கள் மனித வெடிகுண்டு ஆவோம்..என கொலை மிரட்டலும் விடுக்கிறார்கள்.

காரணம் ஒன்றே ஒன்றுதான்.. இன்றைக்கு விமான பயணத்தில், கேள்வி கேட்ட இளைஞன்போல, நாளை வீதி தோறும் நின்று கேட்பவன் எண்ணிக்கை பெருகிவிட்டால் என்ன செய்வது என்கிற தற்குறிகளுக்கே உரிய பதற்றம்தான்.

ஆனாலும் ஒன்று.. ஊரெல்லாம் கூடி ஆர்ப்பாட்டம் மறியல் என குரளி வித்தை செய்த அந்தக் ஒட்டுமொத்த கூட்டத்தில், ஒரே ஒருத்தன்கூட என் தலைவன் துரோகி இல்லை என இன்றுவரை மறுக்கவில்லை.

அப்ப.., கேள்வி சரிதான். கேட்டதுதான் தப்போ..

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.

Share this story