உலகிலேயே பெரிய மையம் இந்தியா : பிரதமர் மோடி பெருமிதம்
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் 54-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில், பிரதமர் மோடி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
அனுமதி :
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, குறிப்பிட்ட அளவில் மட்டுமே மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
கான்பூர் ஐ.ஐ.டி.யில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது :
கான்பூர் ஐ.ஐ.டி.யில் நீங்கள் சேர்ந்தபோது, உங்களுக்கு ஒரு வித பயம் இருந்திருக்கும். தற்போது, உங்களை அதிலிருந்து வெளியேற்றி ஒரு பெரிய நம்பிக்கையை உங்களுக்கு ஐ.ஐ.டி. வழங்கியுள்ளது.
உலகம் முழுவதையும் ஆராய்வதற்கான நம்பிக்கையை உங்களுக்கு அது வழங்கியுள்ளது.
ஸ்டார்ட்-அப் மையம் :
செயற்கை நுண்ணறிவை உருவாக்குங்கள், ஆனால், மனித நுண்ணறிவுடன் தொடர்பை இழக்காதீர்கள். குறியீட்டு முறையைத் தொடருங்கள், ஆனால், மனிதத் தொடர்பை இழக்காதீர்கள்.
சுதந்திரம் பெற்ற இந்த 75-வது ஆண்டில், 75-க்கும் மேற்பட்ட யூனிகார்ன்கள், 50,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப்கள் உள்ளன. இதில், கடந்த 6 மாதங்களில் மட்டும் 10,000 பேர் வந்துள்ளனர்.
இன்று, இந்தியா உலக அளவில் இரண்டாவது பெரிய ஸ்டார்ட் - அப் மையமாக திகழ்கிறது.' என பிரதமர் மோடி தமது பேச்சின்போது குறிப்பிட்டார்.