தீர்ப்பும் திகைப்பும் : மருது அழகுராஜ் கேள்வி

By 
marudhu131

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் எழுப்பியுள்ள கேள்விச்செய்தி வருமாறு :

'மாநிலத்தை ஆள்வோருக்கு காவல்துறை ஆயுதம் என்றால், மத்தியில் ஆள்வோருக்கு சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை என கூடுதலாக ஆயுதக் குவியல்கள்...

இதில், மக்களின் கடைசி நம்பிக்கையான நீதித்துறையும் சேர்ந்து விட்டதோ என்னும் சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே வருகிறது.

ஆம்... காந்தி குடும்பம் என்று நேருவின் வகையறாக்களை கொத்தாக சேர்த்து விமர்சிப்பதற்கு உரிமை கொண்டவைகளை... நீரவ் மோடி, லலித் மோடி என்னும் நாணயமற்ற காரியத்தை செய்து விட்டு நாடு விட்டு ஓடியவர்களோடு, அதனை தடுக்காத பிரதமர் மோடியையும் சேர்த்தாற்போல்..

சிலேடையில் விமர்சித்த ராகுலுக்கு மட்டும் எம்.பி.பதவியை பறிப்பதற்கு ஏதுவாக இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை என்றால்.. தீர்ப்பால் தண்டனையா? இல்லை, தண்டனைக்காக தீர்ப்பா? என மக்கள் இதனை மனசாட்சி கொண்டு, உரைகல்லாக நின்று உரசிப்  பார்ப்பார்கள் தானே..'

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story