நமது சட்டப்போராட்டம் தொடரும் : வேதனையுடன் முதல்வர் ஸ்டாலின் 

By 
Our legal battle will continue Chief Stalin in agony

நீட் தேர்வு அச்சத்தில், மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டது வேதனையையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது குறித்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது :

நீட் தேர்வு அச்சத்தில், மாணவன் தனுஷ் தற்கொலை செய்ததை அறிந்து, வேதனை அடைந்தேன். 

நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப்போராட்டம் இப்போது தொடங்குகிறது. 

மாணவர்களுக்கு நீட் தேர்வு ஏற்படுத்தும் சிரமத்தை, மத்திய அரசு புரிந்துகொள்ளவில்லை. 

மத்திய அரசு தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும்வரை, இந்த சட்டப் போராட்டம் தொடரும்' என்று தெரிவித்துள்ளார்.

Share this story