செப்டம்பர் 17-ந்தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் : பேரவையில், முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
பெரியாரின் குருகுல பயிற்சிதான், திமுகவை உருவாக்கியது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது :
* செப்டம்பர் 17-ந் தேதி தலைமைச்செயலகம், அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும்.
* இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ, அடித்தளம் அமைத்தவர் பெரியார்.
* பெரியார் எழுதிய எழுத்துகள், பேசிய பேச்சுகள் யாரும் எழுத, பேச தயங்கியவை ஆகும்.
* பெரியாரின் போராட்டம் குறித்து பேசுவது என்றால், அவையை 10 நாட்கள் ஒத்திவைத்துவிட்டு பேச வேண்டும்.
* பெரியாரின் குருகுல பயிற்சிதான், திமுகவை உருவாக்கியது' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
*