பிரதமர் மோடி தலைமையில், இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்..
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது.
ஆனால், இந்த 2 ஆண்டுகளில் ஒரு முறைகூட மத்திய அமைச்சரவையில் மாற்றமோ, விரிவாக்கமோ செய்யப்படவில்லை.
இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்ய வசதியாக 12 அமைச்சர்கள் நேற்று ராஜினாமா செய்தனர். 12 அமைச்சர்களின் ராஜினாமாக்களை பிரதமர் மோடியின் பரிந்துரை பேரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் புதிய அமைச்சர்களின் பதவி ஏற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடந்தது.
இதில், புதிதாக 43 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டமும், இரவு 7 மணிக்கு அமைச்சர்கள் குழு கூட்டமும் நடைபெறுகிறது.